சிவாய ஓம்

சிவாய நம ஓம் - சிவாய நம ஓம் - சிவாய நம ஓம்

...பொய்யான மாய உலகில் நிலையான உண்மையை தேடும் பித்தன்...

(ஓம்)

மாயை சூழ்ந்த பூத உலகில் அல்லல் படும் ஜீவன்.

ஓம் நமசிவாய வாழ்க , நாதன்தாழ் வாழ்க ,

Translate

சிவாய ஓம்

ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம்

Wednesday, August 15, 2012

சித்தர்கள்

பெரும்பாலான  சித்தர்கள் பொதுவாக காடுகளிலும் குகைகளிலும் தான்  தங்கள்  ஆன்மீக  வாழ்க்கையை போக்கினார்கள்.
சித்தன் போக்கு   சிவன் போக்கு   என்பது  முற்றிலும் உண்மை
மேலும் விரைவில் -------

Tuesday, August 14, 2012

ரகசியம்

உள்ளம் பெருங்கோவில்  ஊணுடம்பே  ஆலயம் 

வள்ளல் பிரானார்க்கு வாய்  கோபுரவாசல் 

தெல்லத்  தெளிந்தோர்க்கு ஜீவனே  சிவலிங்கம் 

குரு மந்திரம்

குரு மந்திரம்
ஓம் கிரியா பாபாஜி நம ஔம்
(பாபாஜியின் கிரியா யோகத்தின் குரு மந்திரம்)

ஓம்: 
           பிரணவம். பிராணத்தில் ஓடும் பிரபஞ்சத்தின் பிரணவ ஒலி.

கிரியா:
        முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல். தமது செயல்களனைத்தயும் விழிப்புணர்வினைச் செலுத்தும் பொருளாக மாற்றுவதன் மூலம், கிரியா யோக பயிற்சியாளர்களுக்கு இதுவே இலட்சியமாகவும் அதனை அடையும் வாகனமாகவும் ஆகின்றது.

பாபாஜி: 
                   கிரியா யோக மரபின் குரு; பண்டைய யோக பயிற்சிகளைத் தொகுத்து அவற்றை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தவர். பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுய சரிதம்’ எனும் நூலில் குறிப்பிடப்படுபவரும் இவரே.

நம:
            வணக்கங்கள் (அ) ‘நான் உங்களை அழைக்கிறேன்’

ஔம்:  
               நம் அகத்தினுள் ஒத்ததிரும் பிரணவ ஒலி.
இந்த குரு மந்திரமான ‘ஓம் கிரியா பாபாஜி நம ஔம்’, நமது உயிர்த்துடிப்பை பாபாஜியின் அருள் துடிப்புடன் இணைத்து, அந்த மாபெறும் சித்தர் கிரியா பாபாஜியின் அருளை வழங்கும் சக்தி கொண்டுள்ளது. இம்மந்திரத்தின் மூலம் அவர் தன்னைத் தனது பக்தர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் நமது சஹஸ்ர சக்கரத்தில் அமைந்துள்ள அந்தர்-குரு (அ) பேரறிவாற்றலை நாம் தொடர்பு கொள்ளலாம். இம்மந்திரமே விழிப்புணர்வும் அதன் சக்தியுமாகிறது. ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தின் மூலம் குரு தனது சக்தியைச் சீடனுக்கு அளிக்கிறார்; இந்த சக்தி அதே மந்திரத்தின் மூலம் சீடனுள் நுழைகின்றது. குருவின் சொல்லே மந்திரத்தின் வேர் ஆகின்றது; மந்திரம் குருவுருவாகவும் திகழ்கின்றது.
                                                    (thanks to babajiskriyayoga)

மனம்

  சம நிலை இழக்காமல் மனம் இருந்தாலே போதும்
                                                                                       -சிவ திரு வை.கணேசன் 

Monday, August 13, 2012

சிவ புராணம்

                   - திருச்சிற்றம்பலம் -
நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்கு சேயோந்தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன் அவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் !
கண்ணுதலான் தன்கருணை கண் காட்ட வந்தெய்தி
என்னுதற்கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லா மனிதராய் பேயாய் கனங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தனியாய் இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கரந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போல
சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்து அன்பாகி கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதியே மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெரும் கருணை பேராறே
ஆராஅமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக் குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
                    -   திருச்சிற்றம்பலம்  -

அழுகணிச் சித்தர் பாடல்கள்

அழுகணிச் சித்தர் பாடல்கள்:

முதன்மைக் கட்டுரை: அழுகணிச் சித்தர் பாடல்
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ!

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ!

கடுவெளிச் சித்தர்

கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்

கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

குதம்பைச் சித்தர் பாடல்கள்

குதம்பைச் சித்தர் பாடல்கள்



முதன்மைக் கட்டுரை:

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
  கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
  கோலங்கள் ஏதுக்கடி ?

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
  உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
  உண்காயம் ஏதுக்கடி ?

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
  தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
  தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
  முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
  முட்டாக்கு ஏதுக்கடி ?

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
  தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
  தேவாரம் ஏதுக்கடி ?

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
  பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
  பின்னாசை ஏதுக்கடி ?

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
  உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
  உத்தாரம் ஏதுக்கடி ?

சிவனடியார்கள் வாக்கு

நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும்
அதே அளவு எதிர் விசை உண்டு.
                                                                     -சிவனடியார்கள்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்


1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

Tuesday, August 7, 2012

சித்தர்கள்

தமிழ் நாட்டில் இன்றும் பல சித்தர்கள் ரூபமாகவும் அரூபமாகவும் வாழ்ந்து வருகின்றனர். திருவண்ணாமலையில் நமக்கு தெரிந்தது அண்ணாமலையார் கோவில் மட்டுமே ஆனால் அங்கு வசிக்கும் சித்தர்களைப் பற்றி  விரைவில் தங்களுக்கு உரைக்கிறேன். அதற்கு உங்களுடைய நல்  ஆதரவை அளிக்கவும். நன்றி .....
மேலும் புகை படங்களை காண இங்கே அழுத்தவும்.

OM NAMASHIVAYA OM

அம்மைஅப்பருக்கு  முதற்கண்  வணக்கம் .